செய்திகள்
முக ஸ்டாலின்

அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரில் கண்காணிக்க உள்ளேன்- மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை

Published On 2021-09-11 06:51 GMT   |   Update On 2021-09-11 08:53 GMT
சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.



அப்போது மு.க.ஸ்டாலின் அதிரடி எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளோம். சட்டசபையில் அறிவித்துள்ள திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.

இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News