செய்திகள்
உடுமலை, மடத்துக்குளம் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
உடுமலை:
உடுமலையில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை சப்- கோர்ட் வளாகத்தில் நீதிபதி மணிகண்டன் தலைமையில் சிவில் மற்றும் மோட்டார் வாகன சட்டம் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.
இரண்டாவது அமர்வு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பாக்கியராஜ் தலைமையில் நடக்கிறது.
இதில் சிவில் வழக்குகள் நிலுவை வழக்குகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
இதில் பங்கேற்று பயன் பெறுமாறு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் நீதிபதி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
உடுமலையில் நாளை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை சப்- கோர்ட் வளாகத்தில் நீதிபதி மணிகண்டன் தலைமையில் சிவில் மற்றும் மோட்டார் வாகன சட்டம் நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.
இரண்டாவது அமர்வு மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பாக்கியராஜ் தலைமையில் நடக்கிறது.
இதில் சிவில் வழக்குகள் நிலுவை வழக்குகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும்.
இதில் பங்கேற்று பயன் பெறுமாறு வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் நீதிபதி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.