செய்திகள்
போலீசார் விசாரணை

பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தலா?- போலீசார் விசாரணை

Published On 2021-09-06 08:25 GMT   |   Update On 2021-09-06 08:25 GMT
குளித்தலை அருகே பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ரத்தனகிரி. இவருடைய மகள் சரஸ்வதி (வயது 16). இவர் அய்யர்மலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென்று மாயமானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மலர்கொடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News