செய்திகள்
மரணம்

தஞ்சையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

Published On 2021-09-03 11:32 GMT   |   Update On 2021-09-03 11:32 GMT
தஞ்சையில் மின்சாரம் தாக்கியதில் வடமாநில வாலிபர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் சலீம். இவரது மகன் சார்க் (வயது27), நாகை மாவட்டம் வண்டு வாஞ்சேரியை சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக வெள்ளை அடிக்கும் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த மின்சார வயர் சார்க் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News