செய்திகள்
கோப்புப்படம்

முசிறி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்

Published On 2021-09-01 11:24 GMT   |   Update On 2021-09-01 11:24 GMT
முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மருத்துவமுகாம் நடைபெற்றது.
முசிறி:

முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 18 வயதுக்கு மேல் 391 பேருக்கும், 2ம் தவணை தடுப்பூசி 130 பேருக்கும், 45 வயதுக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி 180பேருக்கும் 2ம் தவணை தடுப்பூசி 78 பேருக்கும் மொத்தம் 779 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதே முகாமில் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி 18 வயதுக்குமேல் 9 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4 பேருக்கும், 45 வயதுக்குமேல் முதல் தவணை தடுப்பூசி 30 பேருக்கும் செலுத்தப்பட்டது. முகாமில் முசிறி வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட மேற்பார்வையாளர் கென்னடிபட்ட மேற்பார்வையாளர் சிங்காரம், மருத்துவ ஆய்வாளர் கார்த்திக், சண்முகம் மற்றும் செவிலியர்கள், பயிற்சி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News