செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் பொழுதுபோக்கு பூங்கா - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-08-31 08:32 GMT   |   Update On 2021-08-31 08:32 GMT
நகராட்சிக்கு சொந்தமான 1.1 ஏக்கர் நிலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக கிடந்தது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் 1-வது வார்டு உப்புப்பாளையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 1.1 ஏக்கர் நிலத்தில் 35 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக கிடந்தது.

தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மணியிடம் கேட்ட போது, ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு ரூ.26 லட்சம் செலவில் 1.1 ஏக்கர் முழுவதும் காம்பவுண்ட் சுவர் எழுப்பும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது விரைவில் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றப்படும் என்றார்.
Tags:    

Similar News