செய்திகள்
மதுரையில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து விழுந்தது- ஒருவர் உயிரிழப்பு
மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக பாலம் கட்டப்படுகிறது.
மதுரை:
மதுரை-செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த உத்தர பிரதேச தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ நீளத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக இந்த பாலம் கட்டப்படுகிறது.