செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2021-08-28 09:47 GMT   |   Update On 2021-08-28 09:47 GMT
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படித்த பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
திருப்பூர்:

திருப்பூரில் நாளை  தி.மு.க. சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படியும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் ,திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படியும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் திருப்பூரில் நாளை (29-ந்தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டபடிப்பு, என்ஜினீயரிங் படித்த பட்டதாரிகள் பங்கேற்கலாம்.

7 பெரிய தனியார் நிறுவங்களின் பங்களிப்போடு நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.  இந்த வேலை வாய்ப்பு முகாமினை இளைஞர்கள், இளம் பெண்கள் தவறாமல் பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News