செய்திகள்
கோப்புபடம்

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-08-16 11:30 GMT   |   Update On 2021-08-16 11:30 GMT
பழனி அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனி சத்யாநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அய்யப்பன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News