செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-08-05 14:54 GMT   |   Update On 2021-08-05 14:54 GMT
சென்னையை தவிர 36 மாவட்டங்களில் 1,801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று 1,58,797 பேரது கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 1,997 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள்.

இதனால், தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக உயர்ந்துள்ளது.  1,943 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  33 பேர் பலியாகியுள்ளனர்.  20,138 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 220 பேரும், சென்னையில் 196 பேரும், ஈரோட்டில் 161 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், திருவள்ளூரில் 106 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது.  சென்னையை தவிர 36 மாவட்டங்களில் 1,801 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News