செய்திகள்
கொரோனா வைரஸ்

தடுப்பூசி போடுவதில் குளறுபடி- கம்யூனிஸ்டு புகார்

Published On 2021-08-04 06:38 GMT   |   Update On 2021-08-04 06:38 GMT
அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட வேண்டும்.
திருப்பூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமாருக்கு அனுப்பி உள்ள மனுவில், நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 16, 17, 18, 19, ஆகிய வார்டுகளில் உள்ள மக்களுக்கு போடப்படும் தடுப்பூசியை கடந்த 19 மற்றும் 31-ந்தேதி தவறுதலாக குருவாயூரப்பன் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட போயம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு போடப்பட்டது.

இதனால் நெருப்பெரிச்சல் மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதி மக்கள் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. சேடர்பாளையம், நெருப்பெரிச்சல், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் பெயரளவிற்கு ஓரிரு முகாம்கள் மட்டும் நடத்தியதால் பலருக்கும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் தடுப்பூசி போடுவதற்கு திட்டமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News