செய்திகள்
கோப்புபடம்

பழையகோட்டையில் ரூ.34 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

Published On 2021-08-03 09:23 GMT   |   Update On 2021-08-03 09:23 GMT
சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.36 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும்  நடைபெற்று வருகிறது.  

அதன்படி இந்த வாரம் நடந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் காளைகள் ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

சந்தையில் மொத்தம் 101 காங்கேயம் இன காளைகள், பசு மாடுகளில் மொத்தம் 70 நாட்டு பசு மாடுகள், காளைகள், கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன பல் போடாத மயிலை, காரி ஜோடி காளைகள் ரூ.85 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.36 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.34 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News