செய்திகள்
பழவூர் அருகே மின்வாரிய ஊழியர் திடீர் மரணம்
பழவூர் அருகே திடீரென மயங்கி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது43). இவர் பழவூர் அருகே உள்ள பெருங்குடியில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை செம்பி குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்யும் பணிக்காக அஜித்குமார் சென்றார். அப்போது அங்கு செல்போன் பேசி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அஜித்குமாருக்கு, ஹேமா விஜிலா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது43). இவர் பழவூர் அருகே உள்ள பெருங்குடியில் மின்வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை செம்பி குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் கட்டணம் கணக்கீடு செய்யும் பணிக்காக அஜித்குமார் சென்றார். அப்போது அங்கு செல்போன் பேசி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அஜித்குமாருக்கு, ஹேமா விஜிலா என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.