செய்திகள்
புகார்

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை- கணவர் மீது போலீசில் புகார்

Published On 2021-07-30 10:46 GMT   |   Update On 2021-07-30 10:46 GMT
வரதட்சணையாக ரூ.4 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 24). இவருக்கும் மணிகண்டன் என்ற தொழிலாளிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மணிகண்டன் மற்றும் அவருடைய பெற்றோர் அம்பிகாவிடம் ரூ.4 லட்சம் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அம்பிகா இதுபற்றி தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News