செய்திகள்
தற்கொலை

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-28 11:07 GMT   |   Update On 2021-07-28 11:07 GMT
பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் தாஜ்நகர் அருகே உள்ள ஐந்துமெத்தை பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பி. இவருடைய மகன் வரதராஜ் (வயது 21). விசைத்தறி தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் வரதராஜ் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரதராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News