செய்திகள்
செல்போனுக்கு சார்ஜ் செய்யும் போது விவசாயி பலி
எதிர்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்ததில் மயக்கம் அடைந்தார்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த பூமலூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கணேசன் (வயது47). விவசாயியான இவர்சம்பவத்தன்று தோட்டத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மின்சார மோட்டார் பொருத்தியிருந்த பியூஷ் கேரியரை கழற்றிவிட்டு அதில் உள்ள ஒயரை செல்போனிற்கு சார்ஜ் செய்ய பொருத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிமாக மின்சாரம் பாய்ந்ததில் கணேசன் மயக்கமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.