செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி

Published On 2021-07-25 11:30 GMT   |   Update On 2021-07-25 11:30 GMT
பிரதமருடனான சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகிறது.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நாளை காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகிறது. மோடியை சந்தித்து பேசிய பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை நாளை சந்திப்பதற்காக இன்று இரவு எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News