செய்திகள்
உடுமலை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தாத்தா-பேத்தி பலி
நிலைதடுமாறி சாலையில் விழுந்த கனக சபாபதி, அனன்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அனன்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கோட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனக சபாபதி (வயது 64). இவரது மகள் ஜல்லிப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று மகள் வீட்டிற்கு சென்ற கனகசபாபதி, பின்னர் தனது பேத்தி அனன்யாவை(9) அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு கோட்ட மங்கலத்திற்கு புறப்பட்டார்.
உடுமலை அருகே பெரியப்பட்டி பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், மோட்டார் சைக் கிளும் மோதிக்கொண்டன.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த கனக சபாபதி, அனன்யா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அனன்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தாள்.
கனகசபாபதி பலத்த காயமடைந்து உயி ருக்கு போராடினார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கனகசபாபதியும் இறந்தார்.
இந்த விபத்து குறித்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் கர்நாடகாவை சேர்ந்த முருகேசன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.