செய்திகள்
விபத்து பலி

சங்கராபுரம் அருகே பஸ் மோதி ஒருவர் பலி

Published On 2021-07-24 10:12 GMT   |   Update On 2021-07-24 10:12 GMT
சங்கராபுரம் அருகே பஸ் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள மணக்காடு கிராமத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? அவரது வலது கையில் உதய சூரியன் சின்னமும், இடது கையில் அறிவழகன், கண்ணன் என்ற பெயர்களும் பச்சைக்குத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News