செய்திகள்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 43,517 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனூரை சேர்ந்த 56 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று முன்தினம் வெளியான பரிசோதனை முடிவில், 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,554 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,723 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 43,517 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனூரை சேர்ந்த 56 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரோடு சேர்த்து மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று முன்தினம் வெளியான பரிசோதனை முடிவில், 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,554 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,723 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.