செய்திகள்
கோப்புபடம்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா - முதியவர் பலி

Published On 2021-07-24 01:12 GMT   |   Update On 2021-07-24 01:12 GMT
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. முதியவர் ஒருவரும் பலியானார்.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 46,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து 3 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,705 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 49 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,754 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 97 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 438 பேர் பலியாகி இருந்தனர்‌. இந்தநிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மோகனூரை சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 439 ஆக உயர்ந்தது.

மாவட்டத்தில் இதுவரை 45,636 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 679 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், பொதுமக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News