செய்திகள்
ஆன்லைன் விளையாட்டு: 5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், விற்பனை பிரதிநிதி. இவரது மகன் ஜெயபிரசாத் (வயது 10). ஆனையூர் தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாக தெரிகிறது. இதனை தந்தை கண்டித்துள்ளார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், விற்பனை பிரதிநிதி. இவரது மகன் ஜெயபிரசாத் (வயது 10). ஆனையூர் தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது ஜெயபிரசாத்துக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. அவன் படிப்பில் கவனம் செலுத்தாமல், செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடியதாக தெரிகிறது. இதனை தந்தை கண்டித்துள்ளார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயபிரசாத் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.