செய்திகள்
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பை பறிப்பு
புரசைவாக்கத்தில் பெண்ணிடம் நகை பை திருடப்பட்ட சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
சென்னை:
சென்னை கொசப்பேட்டையை சேர்ந்தவர் வாணி. புரசைவாக்கம் டாணா தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இன்று காலை 5.30 மணிக்கு சூளை வழியாக ஆட்டோவில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். குறவன்குளம் பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வாணி கையில் வைத்திருந்த பையை பறித்து சென்று விட்டார். அதில் 2 பவுன் நகை இருந்தது. இது பற்றி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.