செய்திகள்
திருட்டு

திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க்கில் பணம் திருட்டு

Published On 2021-07-11 17:25 GMT   |   Update On 2021-07-11 17:25 GMT
திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க்கில் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கனகசபை தெருவை சேர்ந்த கோபிகண்ணன்(வயது 59) என்பவர் மேலாளராக உள்ளார். சம்பவத்தன்று சில்லரை கேட்டு வந்த ஒருவர், கோபி கண்ணனை திசை திருப்பிவிட்டு மேஜையில் இருந்த ரூ.18 ஆயிரத்து 500-ஐ திருடிச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News