செய்திகள்
கொரோனா பரிசோதனை

திருவையாறு பகுதியில் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-07-10 11:15 GMT   |   Update On 2021-07-10 11:15 GMT
திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 4 ஊர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருவையாறு:

திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 4 ஊர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 7 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவையாறு தாலுகாவில் வளப்பக்குடி, விளாங்குடி, செம்மங்குடி, ஓலத்தேவராயண்பேட்டை, திருவையாறு ஆகிய 5 ஊர்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் 202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News