செய்திகள்
அய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

உப்பிலியபுரம் பகுதியில் பலத்தமழை- அய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-07-10 10:34 GMT   |   Update On 2021-07-10 10:34 GMT
உப்பிலியபுரம், பி.மேட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 2-ம் பட்டம் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மேலும் கொல்லிமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்தமழையால், புளியஞ்சோலை பகுதியிலுள்ள அய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உப்பிலியபுரம் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டு அவை நிரம்ப தொடங்கி உள்ளன.

இதன்காரணமாக உப்பிலியபுரம், பி.மேட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 2-ம் பட்டம் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகியுள்ள விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News