செய்திகள்
கொரோனா வைரஸ் தோற்றத்தில் இருந்த பூவை படத்தில் காணலாம்.

கொரோனா வைரஸ் வடிவில் பூ-பொதுமக்கள் வியப்பு

Published On 2021-07-07 07:30 GMT   |   Update On 2021-07-07 07:30 GMT
துவக்கத்தில் பச்சை நிறத்திலும், நன்றாக மலர்ந்த நிலையில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் காட்சியளிக்கும்.
அவிநாசி:

அவிநாசி ஒன்றியம் சேவூர் - அ.குரும்பபாளையத்தில் வெற்றி நகர் உள்ளது. அங்குள்ள ஒரு மரத்தில் பூத்த பூ உருண்டையாக பச்சை நிறத்தில் முட்கள் போல் நீட்டிக்கொண்டிருந்தது. இதை பறித்த திருமுருகன்பூண்டியை சேர்ந்த முருகானந்தன் கூறுகையில், இது கொரோனா வைரஸ் தோற்றத்தில் இருந்தது என ஆச்சர்யப்பட்டார்.

திருப்பூர் வன விரிவாக்க மைய அலுவலர் பிரவீன்குமார் கூறுகையில்:

இது கடம்ப மரத்தில் பூக்க கூடிய கடம்ப மலர். சுற்றிலும் முட்கள் போலவே இருக்கும். துவக்கத்தில் பச்சை நிறத்திலும், நன்றாக மலர்ந்த நிலையில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் காட்சியளிக்கும் என்றார். அவிநாசி ஆரூர சிவம் கூறுகையில்: 

கந்தா போற்றி, கடம்பா போற்றி என ஆறுமுகப் பெருமானை துதித்து வழிபாடு செய்கிறோம். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு உகந்தது கடம்ப மலர் என்றார். கொரோனா வைரஸ் வடிவிலான கடம்ப மலரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
Tags:    

Similar News