செய்திகள்
கரூர் மாவட்டம் நஞ்சை புகளூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
கரூர் மாவட்டம் நஞ்சை புகளூர் பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதையொட்டி ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். இதில் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் முகாமில் கலந்துகொண்டவருக்கு சளி, மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.