செய்திகள்
கோப்புபடம்.

மாதுளை பெட்டிக்குள் மறைத்து மது கடத்திய 4 பேர் கைது

Published On 2021-07-03 06:13 GMT   |   Update On 2021-07-03 06:13 GMT
சரக்கு வாகனத்தில் மதுகடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர்:

கொரோனா தடுப்பு காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் மதுக்கடைகள்  திறக்கப்பட வில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து சிலர் கார் உள்ளிட்ட வாகனங்களில் மதுபாட்டில்களை திருப்பூருக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

அதனை தடுக்கும் வகையில் போலீசார் மாவட்ட எல்லையில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் பல்லகவுண்டம் பாளையத்தில் ஊத்துக்குளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.  

சோதனையில் வாகனத்தில் இருந்த மாதுளை பழ பெட்டிகளுக்குள் மறைத்து மதுபாட்டில்களை கடத்தி திருப்பூருக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியப்பன் (வயது 29),  சசிக்குமார்,  தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்த அருள்ஜோதி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 207 மதுபாட்டில் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News