செய்திகள்
தமிழகத்தில் இந்த செயல்பாடுகளுக்கு எல்லாம் தடை நீடிப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் வரும் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சில செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து தடை விதிக்கப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.
திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்கில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.