செய்திகள்
தற்கொலை

அய்யம்பேட்டை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2021-07-02 10:23 GMT   |   Update On 2021-07-02 10:23 GMT
அய்யம்பேட்டை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே செருமாக்கநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி சாந்தி (வயது 40). இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சாந்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி பிஸ்கெட்டை (வி‌ஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News