செய்திகள்
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது
கோவையில் 14 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கட்டிட தொழிளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சாதிபதி (வயது52). கட்டிட தொழிலாளி.
இவர் அப்பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியுடன் லட்சாதிபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது லட்சாதிபதி அச்சிறுமியை கடைகளுக்கு கூட்டிச் செல்வதும், அவ்வப்போது சிறுமியுடன் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு வந்த அந்த சிறுமியிடம் லட்சாதிபதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சாதிபதியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.