செய்திகள்
முகக்கவசம் அணியாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த 18 பயணிகளுக்கு அபராதம்
மெட்ரோ ரெயிலில் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும், மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக மெட்ரோ ரெயில் சேவை கடந்த 21-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கியது.
50 சதவீத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும், மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் கண்காணித்தனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.