செய்திகள்
கைது

மேலப்பாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2021-06-25 11:02 GMT   |   Update On 2021-06-25 11:02 GMT
மேலப்பாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

மேலப்பாளையம் போலீசார் மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நெல்லை தாழையூத்தை சேர்ந்த மதன் (வயது 21), மேலநத்ததைச் சேர்ந்த வெள்ளபாண்டி (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News