செய்திகள்
கைது

களக்காடு அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Published On 2021-06-25 09:31 GMT   |   Update On 2021-06-25 09:31 GMT
களக்காடு அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது49). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டருகே தூங்கி கொண்டிருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறினார். அவர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மகளிர் போலீசார் முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News