செய்திகள்
கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தென்பத்து மேடு கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மகன் தங்கராஜ் (வயது18). இவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதில் மனமுடைந்த தங்கராஜ் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.