செய்திகள்
மரணம்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

Published On 2021-06-22 16:48 GMT   |   Update On 2021-06-22 16:48 GMT
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:

திருச்சி மணிகண்டம், தீரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 22). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர் கே.கே.நகர், சுந்தர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தென்னை மரத்தில் மட்டை உறிப்பதற்காக ஏறி உள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக உச்சியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படு காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News