செய்திகள்
தற்கொலை

கோவையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-22 10:08 GMT   |   Update On 2021-06-22 10:08 GMT
கோவையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை பெரியநாயக்கன்பாளையம் பெட்டதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 39). இவரது மனைவி கிருஷ்ணவேணி (33). மில் தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மன வேதனையுடன் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று விரக்தியடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News