செய்திகள்
தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர்:
சத்தியவாணி முத்து நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் சமூக நலத்துறை சார்பில் செயல் படுத்தப்படுகிறது.விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை பெண்களில் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தையல் எந்திரம் இலவசமாக வழங்கப்படும்.ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.