செய்திகள்
கைது

ஆனைமலையில் பெண்ணை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-06-20 10:22 GMT   |   Update On 2021-06-20 10:22 GMT
ஆனைமலையில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

ஆனைமலை களியபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முருகம்மாள் (50). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சரவணன் (26) மற்றும் அவரது நண்பர் சங்கதுரை (24) ஆகியோர் குடிபோதையில் சுப்ரமணி வீட்டின் அருகே வந்தனர்.

அப்போது அவரது ஆட்டோ மீது வெகு நேரமாக சாய்ந்து நின்று இருந்தனர். இதை பார்த்த சுப்ரமணி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந் அந்த 2 பேரும் சுப்ரமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி முருகம்மாள் அங்கு வந்து அவர்களை தடுத்தார். அப்போது முருகம்மாளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

பலத்த காயமடைந்த சுப்ரமணி மற்றும் முருகம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து முருகம்மாள் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் மற்றும் சங்க துறையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News