செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-06-19 12:31 GMT   |   Update On 2021-06-19 12:31 GMT
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1,756 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 263 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,622 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 184 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 23,176 ஆகும்.
Tags:    

Similar News