செய்திகள்
வெள்ளியணை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
வெள்ளியணை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள ஜல்லி பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). இவர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.