செய்திகள்
வல்லத்தில் ஊரடங்கை மீறிய 70 பேர் மீது வழக்கு - 30 மோட்டார்சைக்கிள் பறிமுதல்
வல்லத்தில் அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் வெளியில் சுற்றி திரிந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து 30 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசிய தேவையின்றி மோட்டார் சைக்கிள்களில் வெளியில் சுற்றி திரிந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து 30 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல முககவசம் அணியாமல் வந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஒரே நாளில் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.