செய்திகள்
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா தப்பியோட்டம்- சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டை

Published On 2021-06-16 02:53 GMT   |   Update On 2021-06-16 02:53 GMT
சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னை: 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள புத்துப்பாக்கம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிவசங்கர் பாபா, உடல்நலக்குறைவு காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவரிடம் நேரடியாக விசாரணை நடத்தி பின்னர் கைது செய்து அழைத்துவர, துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டேராடூன் விரைந்தனர்.

இதற்கிடையில், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க விமானநிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று 2 ஆசிரியைகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா மாயமாகியுள்ளார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News