செய்திகள்
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் ஆவார். அந்த வகையில் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். இந்த நிலையில் ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் ஆவார். அந்த வகையில் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.