செய்திகள்
கைது

காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2021-06-12 09:13 GMT   |   Update On 2021-06-12 09:13 GMT
பெங்களூரில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

புளியங்குடி:

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இருந்து தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு காய்கறிகளை ஏற்றி வரும் வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ், காசி விசுவநாதன் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு ஜெயராஜ் ஆகியோர் புளியங்குடி எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது பெங்களூரில் இருந்து காய்கறிகளை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காய்கறிகளுக்கு இடையில் சுமார் 20 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மினி லாரியை ஓட்டி வந்த சிவா மற்றும் செய்யது அலி ஆகியோரை கைது செய்தனர். மேலும் மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News