செய்திகள்
சூரப்பா

சூரப்பா மீதான விசாரணை- அவகாசம் நீட்டிப்பு

Published On 2021-06-09 07:43 GMT   |   Update On 2021-06-09 07:43 GMT
இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்ய கூடுதல் அவகாசம் கோரி நீதிபதி கலையரசன் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் தொடர்பான விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் நியமனம் செய்யப்பட்டார்.



இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வந்தநிலையில், இறுதிக்கட்ட அறிக்கை தயார் செய்ய கூடுதல் அவகாசம் கோரி அவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News