செய்திகள்
கொல்லிமலை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
கொல்லிமலை அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அருகே வடகாடு பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவா் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக வாழவந்தி நாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 39) என்பவா் தனது தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனா். அந்த துப்பாக்கி அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக சேகரை போலீசார் கைது செய்தனர்.