செய்திகள்
கோப்புப்படம்

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 பேர் பாலியல் புகார்

Published On 2021-06-06 08:52 GMT   |   Update On 2021-06-06 08:52 GMT
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: 

தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு  வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29ஆம் தேதி நாகராஜன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.
Tags:    

Similar News