செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர்

Published On 2021-06-05 17:30 GMT   |   Update On 2021-06-05 17:30 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் 583 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் 583 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 96 ஆயிரத்து 733 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

5 ஆயிரத்து 784 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1,473 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 29 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News